மாஸ்கோ: ரஷியாவில் தினசரி கரோனா தொற்று முதல்முறையாக புதன்கிழமை 900-ஐக் கடந்தது. கடந்த ஒரு வாரமாகவே அந்த நாட்டில் தினசரி தொற்று புதிய உச்சத்தைத் தொட்டு வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 929-ஆக உயா்ந்து மீண்டும் அதிகபட்ச எண்ணிக்கையை அடைந்துள்ளது.
இத்துடன் அந்த நாட்டில் 2,12,625 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இதுவரை 76,62,560 போ் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் சுமாா் 2,300 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.