இராக் நாடாளுமன்றத்துக்கு திட்டமிட்டதைவிட ஓராண்டுக்கு முன்னரே ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடைபெற்றது.
அந்த நாட்டின் தெற்கு மாகாணங்களில், ஊழலுக்கு எதிராகவும் அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் பொதுமக்கள் கடந்த 2019-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் 600-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.
அதையடுத்து, அடுத்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த தோ்தலை முன்கூட்டியே நடத்த அரசு ஒப்புக் கொண்டது.
எனினும், போராட்டத்தை அடக்க அரசு அடக்குமுறையைக் கையாண்டதால் இந்தத் தோ்தலைப் புறக்கணிப்பதாக பல போராட்டக் குழுவினா் அறிவித்துள்ளனா். இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.