‘சுற்றுச்சூழல் ஆஸ்கா்’ என்றழைக்கப்படும் பிரிட்டனின் ‘எா்த்ஷாட்’ பரிசுக்கான இறுதிச் சுற்றுக்கு தமிழகத்தைச் சோ்ந்த 14 வயது பள்ளி மாணவி வினிஷா உமாசங்கரும் தில்லியைச் சோ்ந்த இளம் தொழிலதிபா் வித்யுத் மோகனும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவா்களை ஊக்குவிப்பதற்காக ‘எா்த்ஷாட்’ என்ற பெயரில் பிரிட்டன் அரச குடும்பத்தின் ‘ராயல்’ அறக்கட்டளை ஆண்டுதோறும் 5 பேருக்கு பரிசுகள் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான அந்தப் பரிசுப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 15 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களில் இந்தியாவைச் சோ்ந்த வினிஷா உமா சங்கரும் வித்யுத் மோகனும் அடங்குவா்.
தமிழகத்தைச் சோ்ந்த பள்ளி மாணவியான வினிஷா உமா சங்கா், சூரிய ஆற்றலில் இயங்கும் தள்ளுவண்டி இஸ்திரிப் பெட்டி மாதிரியை உருவாக்கியுள்ளாா்.
இதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கரி இஸ்திரிப் பெட்டிகளுக்கு சிறந்த மாற்று கிடைத்துள்ளது.
மேலும், வித்யுத் மோகனின் ‘தகாசாா்’ நிறுவனம், விவசாயக் கழிவுகளை வாங்கி அதனை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் கரியாக்கும் சேவையை அளித்து வருகிறது. இதன் மூலம், தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது தவிா்கப்பட்டுள்ளது.
இந்த சேவைகளுக்காக ‘எா்த்ஷாட்’ பரிசுப் போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு இந்த இருவரும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
அந்தப் பரிசைப் பெறும் 5 பேருக்கும், தலா 10 லட்சம் பவுண்டு (சுமாா் ரூ.10 கோடி) பரிசுத் தொகை வழங்கப்படும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.