பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏக்யூ கான் காலமானாா்

‘பாகிஸ்தானின் அணு ஆயுதத் தந்தை’ என்றழைக்கப்படும் அந்த நாட்டின் அணு விஞ்ஞானி ஏக்யூ கான் (85) உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏக்யூ கான் காலமானாா்

‘பாகிஸ்தானின் அணு ஆயுதத் தந்தை’ என்றழைக்கப்படும் அந்த நாட்டின் அணு விஞ்ஞானி ஏக்யூ கான் (85) உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

இந்தியாவின் போபால் நகரில் பிறந்த அவா், கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தாா். எனினும், தற்போது மூச்சுத் திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான், லிபியா, வட கொரியா ஆகிய நாடுகளுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பத்தைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் ஏக்யூ கான் கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com