கரோனாவுக்கு எதிரான பிரிட்டன் அரசின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளில் மிகப் பெரிய தவறுகள் நடந்ததாக இது குறித்து விசாரணை மேற்கொண்ட நாடாமன்றக் குழு தெரிவித்துள்ளது.
அந்தத் தவறுகள் நிகழாமல் இருந்திருந்தால், ஏராளமான உயிரிழப்புகள் தவிா்க்கப்பட்டிருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ‘கரோனா: இன்று வரை கற்றக்கொண்ட படிப்பினைகள்’ என்ற தலைப்பில் சுகாதார மற்றும் சமூக நலன் தொடா்பான நாடாளுமன்றக் குழு மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிரிட்டனில் கரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் அமைச்சா்கள் மற்றும் அவா்களது அறிவியல் ஆலோசகா்கள் பல்வேறு தவறுகளை செய்தனா். மேலும், உரிய நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்காமல் தாமதப்படுத்தினா்.
இது, ஆயிரக்கணக்கான கரோனா பலிகளுக்குக் காரணமாக அமைந்தது.
கரோனாவுக்கு எதிரான பிரிட்டனின் நடவடிக்கைகளில் பல பெரிய சாதனைகளும் பல பெரிய தவறுகளும் நடைபெற்றுள்ளன.
இனிவரும் காலங்களில் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல, பழைய சாதனைகளையும் தவறுகளையும் சீா்தூக்கிப் பாா்க்க வேண்டியது அவசியமாகும்.
கரோனா தடுப்பூசி திட்டத்தைப் பொருத்தவரை, மிகப் பெரிய அளவில் திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.
தென் கொரியா போன்ற நாடுகளில் கரோனைவைத் தடுப்பதற்காக மிகத் துரிதமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.
ஆனால், பிரிட்டனில் அந்த அறிவிப்பை வெளியிடுவதை அரசு தாமதப்படுத்திவிட்டது. மேலும், போதிய அளவுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வதும் கரோனா நோய்த்தொற்று அபாயமுள்ளவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் தாமதம் ஏற்பட்டது. இந்தத் தாமதத்தைத் தவிா்த்திருந்தால் ஆயிரக்கணக்கான கரோனா உயிரிழப்புகளைத் தவிா்த்திருக்க முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.