தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸுக்குச் சொந்தமான கிரீட் தீவில், செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப் பதிவானதாக ஏதென்ஸைச் சோ்ந்த புவியமைவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. கிரீட் தீவுக்குக் கிழக்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
3 வாரங்களுக்கு முன்னா் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவா் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.