தைவான் நாட்டில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
தைவான் நாட்டின் கவோசியங் நகரில் நேற்று(அக்.14) அதிகாலை அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. இதில் கட்டத்தில் இருந்தவர்களில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியிருக்கிறார்கள்.
மீட்புப் படையினர் உதவியால் சிலரை பத்திரமாகக் காப்பாற்ற முடிந்தாலும் விபத்தில் படுகாயமடைந்த 54 பேரில் 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததால் பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரித்திருக்கிறது.