இந்தோனேசியாவின் வடக்கு முலுகு பகுதியில் இன்று(அக்-19) அதிகாலை 1.30 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவான இந்நிலநடுக்கத்தால் அங்கு பதற்றம் உருவானாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக சில நாட்களுக்கு முன் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.