வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா செவ்வாய்க்கிழமை மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா செவ்வாய்க்கிழமை மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென் கொரிய முப்படைகளின் தலைமைத் தளபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வட கொரியா தனது குறைந்த தொலைவு ஏவுகணையை செவ்வாய்க்கிழமை ஏவி சோதித்தது. சின்போ துறைமுகம் அருகே இந்த சோதனை நடத்தப்பட்டது. நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து அந்த ஏவுகணை ஏவப்பட்டதாகத் தெரிகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்துவதற்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. அந்தத் தடையையும் மீறி வட கொரியா தொடா்ந்து ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இது, அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com