பொலிவியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
பொலிவியாவைச் சேர்ந்த ஒருரா பகுதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்தில் பயணித்த 14 பயணிகளில் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
விபத்து நிகழ்ந்த பின் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை பலனளிக்காததே பலி எண்ணிக்கை உயர்ந்ததற்கான காரணமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் விபத்து குறித்து அம்மாகாண காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.