நேபாளத்தில் கனமழை: 31 பேர் பலி

நேபாளத்தில் பெய்து வரும் கனமழைக்கு 31 பேர் பலியாகினர்; 43 பேர் மாயமாகினர்.
நேபாளத்தில் கனமழை: 31 பேர் பலி


காத்மாண்டு: நேபாளத்தில் பெய்து வரும் கனமழைக்கு 31 பேர் பலியாகினர்; 43 பேர் மாயமாகினர்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

நேபாளத்தில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்தச் சம்பவங்களில் 32 பேர் உயிரிழந்ததாகவும் 22 பேர் காயமடைந்ததாகவும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். 

மேலும், 43 பேரைக் காணவில்லை ; பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை சுமார் 700 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் கூறினர். மழை தொடர்பான சம்பவங்களில் நாட்டின் 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com