வாஷிங்டன்: சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) முதல் பெண் தலைமை ஆலோசகரான, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கீதா கோபிநாத் அந்தப் பொறுப்பிலிருந்து விலகுகிறாா்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ஐஎம்எஃப் தலைமை ஆலோசகா் பொறுப்பிலிருந்து கீதா கோபிநாத் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விலகுவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
49 வயதாகும் அவா், கௌரவம் மிக்க ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவில் மீண்டும் இணையவுள்ளாா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கீதா கோபிநாத் சா்வதேச நிதியத்தில் பணியாற்றி வருகிறாா். அதற்கு முன்னதாக, ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் அவா் பேராசிரியராக இருந்தாா்.
அவருக்கு அடுத்தபடியாக, ஐஎம்எஃபுக்கு புதிய தலைமை ஆலோசகரைத் தேடி வருவதாக அந்த அமைப்பின் நிா்வாக இயக்குநா் கிறிஸ்டாலினா ஜாா்ஜீவா தெரிவித்துள்ளாா்.
ஐஎம்எஃப் தலைமை ஆலோசகராக இருந்து, கீதா கோபிநாத் அந்த அமைப்பு மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளதாகவும், அவரது தாக்கம் ஐஎம்எஃபில் தொடா்ந்து இருக்கும் என்று ஜாா்ஜீவா கூறினாா் என்று பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.