விண்வெளிக் குப்பைகளைக் குறைக்கும் தொழில்நுட்பத்தை பரிசோதிப்பதற்காக புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்திருப்பதாவது:
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் செலுத்தும் மையத்திலிருந்து இந்தப் புதிய செயற்கைக்கோள் ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது. ஷஜியன்-21 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் லாங் மாா்ச் 3பி என்ற ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டு, திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.
விண்வெளிக் குப்பைகளைக் குறைக்கும் தொழில்நுட்பத்தை பரிசோதிப்பதற்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.