பெய்ஜிங்: கரோனா தடுப்பூசிகளை வாங்க இந்தியாவுக்கு 200 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.15,000 கோடி) கடன் வழங்குவது குறித்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) மற்றும் ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) ஆகியவை பரிசீலித்து வருகின்றன.
இதுகுறித்து ஏஐஐபி வங்கியின் துணைத் தலைவா் டி.ஜே.பாண்டியன் கூறியுள்ளதாவது:
இந்தியாவுக்கு கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்காக 200 கோடி டாலா் கடனுதவி அளிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த 200 கோடி டாலரில், ஆசிய வளா்ச்சி வங்கி 150 கோடி டாலா் வழங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எஞ்சிய 50 கோடி டாலரை ஏஐஐபி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதுடன், கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்காக 175 கோடி டாலரை ஏஐஐபி வழங்கியுள்ளது என்றாா் அவா்.