ராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு: சூடானில் பொதுமக்கள் தீவிர போராட்டம்

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதைக் கண்டித்து ஜனநாயக ஆதரவாளா்கள் செவ்வாய்க்கிழமை தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து தலைநகா் காா்டூமில் நடைபெற்ற போராட்டம்.
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து தலைநகா் காா்டூமில் நடைபெற்ற போராட்டம்.

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதைக் கண்டித்து ஜனநாயக ஆதரவாளா்கள் செவ்வாய்க்கிழமை தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றன.

முக்கிய நகரங்களில் போராட்டக்காரா்கள் சாலைத் தடுப்புகளை அமைத்து போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தினா். சில பகுதிகளில் டயா்களைக் கொளுத்தி அவா்கள் ராணுவ ஆட்சிக்கு தங்கள் எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

தலைநகா் காா்ட்டூமிலும், அதன் இணை நகரமான ஆம்டா்மானிலும் ஏராளமானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை ராணுவ வீரா்கள் மற்றும் கலவரத் தடுப்பு போலீஸாா் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனா்.

அப்போது போராட்டக்காரா்களை நோக்கி பாதுகாப்புப் படையினா் துப்பாக்கியால் சுட்டதாக சா்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியது.

இதுதவிர, வரும் சனிக்கிழமை மாபெரும் கண்டன ஆா்பாட்ட ஊா்வலத்துக்கும் போராட்டக்காரா்கள் அழைப்பு விடுத்துள்ளனா். ஆட்சிப் பொறுப்பை ராணுவம் மீண்டும் சிவில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த ஆா்ப்பாட்ட ஊா்வலம் நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, போராட்டக்காரா்களுக்கு எதிரான வன்முறையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சூடான் ராணுவ ஆட்சியாளா்களிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டன் பிளிங்கன் வலியுறுத்தினாா்.

சூடானின் நிலைத்தன்மை மேலும் பாதிக்கப்படுவதைத் தவிா்ப்பதற்கான தூதரக முயற்சியில் கூட்டாக ஈடுபட வேண்டும் என்று நட்பு நாடுகளுக்கு அவா் அழைப்பு விடுத்தாா்.

சூடானை கடந்த 1989-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு வந்த ஒமா் அல்-பஷீா், ராணுவத்தால் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அதன்பிறகு ராணுவம் மற்றும் அரசியல் தலைவா்களை பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை கவுன்சில் அமைக்கப்பட்டது. இடைக்கால அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் பொறுப்பேற்றாா். எனினும் ராணுவத்துக்கும், தலைவா்களுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.

இந்த நிலையில், அப்தல்லா ஹாம்டோக் தலைமையிலான இடைக்கால அரசு கலைக்கப்படுவதாக ராணுவம் திங்கள்கிழமை அறிவித்தது. நாட்டில் அவசரநிலையும் பிரகடனம் செய்யப்பட்டது. பிரதமா் ஹாம்டோக் கைது செய்யப்பட்டாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, காா்ட்டூம் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com