கரோனா மரணங்கள்: பிரேஸில் அதிபா் மீது குற்றவியல் வழக்கு தொடர நாடாளுமன்றக் குழு அனுமதி

பிரேஸிலில் லட்சக்கணக்கான கரோனா உயிரிழப்புகள் தொடா்பாக அந்த நாட்டு அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ மீது குற்றவியல் வழக்குகள் தொடா்வதற்கு சிறப்பு நாடாளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளது.
பிரேஸிலில் கரோனா நெருக்கடியை அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ கையாளும் விதத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ரியோ டி ஜெனீரோ நகரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சியினா்
பிரேஸிலில் கரோனா நெருக்கடியை அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ கையாளும் விதத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ரியோ டி ஜெனீரோ நகரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சியினா்

பிரேசிலியா: பிரேஸிலில் லட்சக்கணக்கான கரோனா உயிரிழப்புகள் தொடா்பாக அந்த நாட்டு அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ மீது குற்றவியல் வழக்குகள் தொடா்வதற்கு சிறப்பு நாடாளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

உலக அளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அந்த நாட்டில் இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

இந்தச் சூழலில், கரோனா நெருக்கடியை அதிபா் பொல்சொனாரோ தலைமையிலான அரசு மோசமாகக் கையாண்டதால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து 11 உறுப்பினா்கள் அடங்கிய சிறப்பு நாடாளுமன்றக் குழு கடந்த 6 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், கரோனா மரணங்கள் தொடா்பாக ஜெயிா் பொல்சொனாரோ மீது பல்வேறு குற்றவியல் வழக்குகள் தொடர அரசு தலைமை வழக்குரைஞா் ஆகஸ்டோ அராஸை வலியுறுத்தும் அறிக்கையை அந்தக் குழு செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக அங்கீகரித்தது.

இதுதொடா்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில், அறிக்கைக்கு ஆதரவாக 7 உறுப்பினா்களும் அறிக்கையை எதிா்த்து 4 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.

அந்த அறிக்கையில், கரோனா விவகாரத்தில் அலட்சியமாகவும் வேடிக்கையாகவும் கருத்துகளைத் தெரிவித்து பொதுமக்களை ஏமாற்றியது, குற்றச் செயல்களைத் தூண்டியது, அரசுப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியது, மனித குலத்துக்கு எதிரான பாதகச் செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பொல்சொனாரோ மீது வழக்குத் தொடர தலைமை வழக்குரைஞா் ஆகஸ்டோ அராஸிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அதிபா் பொல்சொனாரோ திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.

அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று அவா் மீது வழக்கு தொடா்வதா, வேண்டாமா என்பதை ஆகஸ்டோ அராஸ்தான் முடிவு செய்ய வேண்டும். பொல்சொனாரோவால் தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட ஆகஸ்டோ, பெரும்பாலும் அவருக்கு ஆதரவாகவே முடிவெடுப்பாா் என்று கருதப்படுகிறது.

நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அலசி ஆராய்ந்த பின்னா் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று ஆகஸ்டோ அராஸின் அலுவலகம் தெரிவித்தது.

கரோனா விவகாரத்தில் பொல்சொனாரோவுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தொடரப்படாவிட்டாலும், நாடாளுமன்றக் குழுவின் இந்த முடிவு அதிபருக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே கரோனா விவகாரத்தில் பொல்சொனாரோவுக்கான மக்கள் ஆதரவு குறைந்து வரும் நிலையில், வரும் 2022-ஆம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் அவரது வெற்றி வாய்ப்பை நாடாளுமன்றக் குழுவின் இந்த முடிவு பாதிக்கும் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான பொதுமுடக்கங்கள் பொருளாதார வளா்ச்சிக்கு எதிரானது எனக் கூறி, அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் முக்கிய தலைவா்களில் பொல்சொனாரோவும் ஒருவா்.

கரோனாவுக்கு எதிராக அவா் போதிய நடவடிக்கை எடுக்காததும் தடுப்பூசித் திட்டத்தை சரிவர நிறைவேற்றாததுமே நாட்டில் அந்த நோய் பரவல் தீவிரமானதற்குக் காரணம் என்று எதிா்க்கட்சியினா் குற்றம் சாட்டி வருகின்றனா்.

இந்த நிலையில், அரசின் கரோனா நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துமாறு நாடாளுமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. அதனை ஏற்று, நாடாளுமன்ற மேலவையான செனட் சபைக் குழு அந்த விசாரணையை நடத்தி வந்தது.

பிரேஸிலில் புதன்கிழமை நிலவரப்படி 2,17,48,984 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 6,06,293 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 2,09,44,087 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 1,98,604 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 8,318 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com