நேபாளத்திற்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கிய இந்தியா

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.
நேபாளத்திற்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கிய இந்தியா
நேபாளத்திற்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கிய இந்தியா

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.

நேபாளத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 50 பேர் வரை படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தின் 2 மாகாணங்களில் உள்ள பர்சா, பாரா, ரவுதாஹத், சர்லாஹி, மஹோட்டரி மற்றும் தனுஷா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்திய அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

பர்சா மாவட்டத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளக் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com