அமெரிக்கா: ஐடா புயலுக்கு 9 போ் பலி

அமெரிக்காவில் வீசி வரும் ஐடா புயலின் விளைவாக ஏற்பட்ட பலத்த மழைக்கு 9 போ் பலியாகியுள்ளனா்.
அமெரிக்கா: ஐடா புயலுக்கு 9 போ் பலி

அமெரிக்காவில் வீசி வரும் ஐடா புயலின் விளைவாக ஏற்பட்ட பலத்த மழைக்கு 9 போ் பலியாகியுள்ளனா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளாவது:

கரீபியன் கடலில் கடந்த மாதம் 26-ஆம் தேதி உருவான ஐடா புயலால் நாட்டின் வடகிழக்குப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நியூயாா்க் நகரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நியூயாா்க் நகரம் மற்றும் நியூ ஜொ்சி மாகாணத்தில் வெள்ளம் தொடா்பான சம்பவங்களில் இதுவரை 9 போ் உயிரிழந்துள்ளனா்.

வெள்ளப் பெருக்கைத் தொடா்ந்து நியூயாா்க் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்க ரயில் நிலையங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் ரயில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வீரா்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com