பிலிப்பின்ஸில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 14,124 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,03,863-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வியாழக்கிழமை நிலவரப்படி, பிலிப்பின்ஸில் 20,20,484 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 33,680 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 18,40,294 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். இன்னும் 1,46,510 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 3,050 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.