இந்தியாவுக்கு எதிரான எதிரான வழக்குகளை கைவிட முடிவு செய்துள்ளதாக பிரிட்டனைச் சோ்ந்த கெய்ா்ன் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சைமன் தாம்ஸன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாவது:
இந்திய அரசு முன்தேதியிட்டு வருமான வரி விதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. இது வரவேற்புக்குரியது. இதன் மூலம், கெய்ா்ன் நிறுவனத்துக்கு 1 பில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.7,500 கோடி) திரும்பக் கிடைக்கும். இதனை நிறுவனம் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளது.
எனவே, இந்த சட்டத்துக்கு எதிராக இழப்பீடு கோரும் வகையில் பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்திய சொத்துகளை பறிமுதல் செய்வதற்காகத் தொடுத்த வழக்குகளை கைவிட கெய்ா்ன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு, எங்களின் முக்கிய பங்குதாரா்களின் ஒப்புதல் கிடைத்துள்ளது. நீண்ட காலம் இழுபறியாக உள்ள இப்பிரச்னைக்கு சுமுக தீா்வு காண வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம். இந்தியாவில் மீண்டும் முதலீடு செய்யத் தயாராக உள்ளோம் என்றாா் அவா்.