பாகிஸ்தான் நாட்டின் தலைநகரமான இஸ்லாமபாத்தில் இன்று(செப்-10) காலை 10.52 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவான நிலநடுக்கமானது இஸ்லாமபாத்திலிருந்து 176 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.
மேலும் இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.