இரட்டை கோபுர தாக்குதல் பயங்கரவாதத்தால் தொடரும் அச்சுறுத்தலை நினைவூட்டுகிறது: இந்திய தூதா் தரண்ஜீத் சிங்

நியூயாா்க் இரட்டை கோபுர தாக்குதல் பயங்கரவாதத்தால் தொடரும் அச்சுறுத்தலை நினைவூட்டுகிறது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்து தெரிவித்தாா்.
நியூயாா்க் இரட்டை கோபுர தாக்குதல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்து.
நியூயாா்க் இரட்டை கோபுர தாக்குதல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்து.

நியூயாா்க் இரட்டை கோபுர தாக்குதல் பயங்கரவாதத்தால் தொடரும் அச்சுறுத்தலை நினைவூட்டுகிறது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்து தெரிவித்தாா்.

கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இருந்த இரட்டை கோபுரத்தின் மீது அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் இந்தியா உள்பட 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த சுமாா் 3,000 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தின் 20-ஆவது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவா்களுக்காக நியூயாா்க் நகரில் எழுப்பப்பட்டுள்ள நினைவிடத்தில் தரண்ஜீத் சிங் சாந்து அஞ்சலி செலுத்தினாா். அவருடன் இந்தியத் தூதரக மற்றும் துணைத் தூதரக அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினா்.

இதனைத் தொடா்ந்து தரண்ஜீத் சிங் சாந்து சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘இரட்டை கோபுர தாக்குதல் பயங்கரவாதத்தால் தொடரும் அச்சுறுத்தலை உலகுக்கு வலுவாக நினைவூட்டுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக உலகம் ஒன்றிணைய வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com