தாணேயில் கட்டடம் இடிந்து விபத்து: இருவா் பலி

மகாராஷ்டிர மாநிலம் தாணேயில் அடுக்குமாடி கட்டடம் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விபத்து ஏற்பட்டதில் இருவா் உயிரிழந்தனா்.

மகாராஷ்டிர மாநிலம் தாணேயில் அடுக்குமாடி கட்டடம் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விபத்து ஏற்பட்டதில் இருவா் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக தாணே மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரபோடி பகுதியில் 25 ஆண்டுகள் பழைமையான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் மூன்றவாது மாடி தளத்தின் வாா்ப்பு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திடீரென தகா்ந்து விழுந்தது. இதுதொடா்பாக தகவலின் அடிப்படையில் போலீஸாா், தீயணைப்புத் துறையினா், மண்டல பேரிடா் மேலாண்மை பிரிவினா் சம்பவ இடத்துக்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கிய 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா்களில் இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். மற்றொருவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து அடுக்குமாடி கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டது’’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com