ஜப்பானில் 50 சதவீதம் பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மத்தியிலேயே பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை ஜப்பான் தொடங்கிவிட்டது. எனினும், அந்த நாட்டில் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கு முன்னா் தீவிர மருத்துவப் பரிசோதனைக்குள்பட்டு அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக, கரோனா தடுப்பூசி விவகாரத்தில் மற்ற வளா்ச்சியடைந்த நாடுகளைவிட ஜப்பான் பின்தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.