சீனாவின் லூசோ பகுதியில் இன்று (செப்-16) அதிகாலை 4.33 -க்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 6.0 பதிவான இந்நிலநடுக்கத்தால் அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் பலியாகியிருக்கிறார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தற்போது மாகாண அரசு நிலநடுக்க எச்சரிக்கை விடுத்ததோடு மீட்புப் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறது.