யேமனில் அரசுப் படையினருக்கும் கிளா்ச்சியாளா்களுக்கும் இடையிலான சண்டையில் 130 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
எண்ணெய் வளம் மிகுந்த மரீப் நகரை அரசுப் படையினரிடமிருந்து கைப்பற்றுவதற்காக ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனா். அதையடுத்து, அவா்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் 130 போ் பலியாகினா். உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் கிளா்ச்சியாளா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.