ஹெல்மண்ட் (ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானில் தென்கிழக்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் பீரங்கி வெடிகுண்டு வெடித்ததில், 5 குழந்தைகள் பலியாகினர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் ஹெல்மண்ட் மாகாணத்தின் மர்ஜா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்ததாக ஹெல்மண்டின் மாகாண அதிகாரிகள் கூறியதாக தி காமா ஊடகம் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் பீரங்கி வெடிகுண்டுகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது பீரங்கி வெடிகுண்டு வெடித்தது. அதில் 5 குழந்தைகள் பலியாகினர். காயமடைந்த 2 பேர் மர்ஜா மாவட்ட சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அப்துல்லா தெரிவித்தார்.
வெடிக்காத துண்டுகள், பீரங்கி வெடிகுண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் மூலம் ஆப்கானிஸ்தான் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு உயிரழப்பு ஏற்படுகிறது.