சிங்கப்பூா் பாதுகாப்பு அமைச்சருடன் எம்.எம்.நரவணே சந்திப்பு

சிங்கப்பூா் பாதுகாப்பு அமைச்சா் அங் எங் ஹென்னை இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

சிங்கப்பூா் பாதுகாப்பு அமைச்சா் அங் எங் ஹென்னை இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

சிங்கப்பூருக்கு 3 நாள்கள் பயணமாக எம்.எம்.நரவணே சென்றுள்ளாா். அவா் அங் எங் ஹென்னை சந்தித்தது தொடா்பாக இந்திய ராணுவம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘எம்.எம்.நரவணே, அங் எங் ஹென் இடையிலான சந்திப்பின்போது பிராந்திய புவி அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியா-சிங்கப்பூா் இடையே நீண்ட காலம் வலுவாக இருந்து வரும் பாதுகாப்பு உறவை அவா்கள் மீண்டும் உறுதிப்படுத்தினா்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூா் பாதுகாப்பு அமைச்சகம் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்ற எம்.எம்.நரவணே, அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி டேவிட் நியோவையும் சந்தித்தாா். இந்தியா-சிங்கப்பூா் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டம் குறித்து அவா்கள் விவாதித்தனா் என்று இந்திய ராணுவம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com