புதினின் மகள்களை குறிவைத்து அமெரிக்கா புதிய தடை

உக்ரைன் மீது 42 ஆவது நாளாக தாக்குதல் நடந்து வரும்  ரஷியப் படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிபர் விளாதிமீர் புதினின் இரு மகள்கள் மீது முதல்முறையாக தனிப்பட்ட புதிய தடைகளை வெள்ளை மாளிகை அறிவித்துள்
புதின்
புதின்


வாஷிங்டன்: உக்ரைன் மீது 42 ஆவது நாளாக தாக்குதல் நடந்து வரும்  ரஷியப் படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிபர் விளாதிமீர் புதினின் இரு மகள்கள் மீது முதல்முறையாக தனிப்பட்ட புதிய தடைகளை வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷியப் படைகளுக்கு எதிப்புக்கு தெரிவிக்கும் வகையில் ரஷியா மீது பல்வேறு தடைகள் அறிவித்து வரும் அமெரிக்கா, தற்போது புதினின் மகள்களை குறிவைத்து பல்வேறு தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா. 

அதன்படி, ரஷிய அதிபர் புதினின் மகள்களான மரியா புதின், கேத்தரீனா டிக்கோனோவாவை குறி வைத்து பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் பொருளாதாரத் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

அமெரிக்காவில் அவர்களுக்கு சொத்துகள் இருந்தாலும், இனி பயன்படுத்த முடியாது. அவர்கள் இருவரும் ரஷிய வங்கிகள் உள்ளிட்ட அமெரிக்க நிதி அமைப்பில் எந்த பரிமாற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினின் மகள்களைத் தவிர, ரஷிய பிரதமர் மிகைல் மிசுஷ்டின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் மனைவி, குழந்தைகள், முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் உள்ளிட்ட பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவின் தடை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

அதேபோன்று ரஷியாவின் ஸ்பெர் வங்கி, ஆல்பா வங்கிகள் அமெரிக்க நிதி அமைப்பை தொடர்புகொள்ள முடியாது. இந்த வங்கிகளை அமெரிக்கர்களும் பயன்படுத்த இயலாது. 

டிக்கோனோவா ரஷிய ஸ்டேட் யுனிவர்சிட்டியில் அறிவியல் மையத்தின் இயக்குநராகவும், கணித ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநராகவும் உள்ளார். அவர் 2013 மற்றும் 2018 க்கு இடையில் ரோசியா வங்கியின் இணை உரிமையாளரின் மகனான எரிவாயு நிறுவன நிர்வாகி கிரில் ஷமலோவை மணந்தார்.

ரஷியாவில் அமெரிக்கர்களின் எந்த புதிய முதலீடுகளுக்கும் தடைசெய்யும் உத்தரவில் பைடன் நேற்று கையெழுத்திட்டார், இது அமெரிக்கர்களுக்கும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைனில் ரஷியாவின் போர்க்குற்றங்களுக்கு எதிராக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளாக அமெரிக்கா நேற்று அறிவித்திருந்தது. 

புதினின் மகள்களை அமெரிக்கா ஏன் குறிவைக்கிறது என்று கேள்விக்கு, தந்தை புதினின் சில சொத்துக்களை அவர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த புதிய தடையை அறிவித்திருக்கலாம் என்றும்,  "புதினின் பல சொத்துக்கள் குடும்ப உறுப்பினர்களிடம் மறைக்கப்பட்டுள்ளதாக நம்புகிறோம், அதனால்தான் அவர்களை குறிவைக்கிறோம்" என்று பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com