கார்கீவ் பகுதியில் உக்ரைனின் எரிபொருள் சேமிப்புத் தளத்தை ரஷியப் படையினர் தாக்கி அழித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பகுதியாக ரஷியப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே உக்ரைன் மக்கள் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மேற்குலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, இன்று கார்கீவ் பகுதியில் உக்ரைனின் எரிபொருள் சேமிப்புத் தளம் ரஷிய ஏவுகணைகளால் தாக்கி அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அதே பகுதியில் ஒரு ரயில் நிலையத்தில் உள்ள சில ராணுவ உபகரணங்களையும் வெளிநாட்டு ஆயுதங்களையும் ரஷியப்படையினர் அழித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்கள் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக, ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.