தைவான் கடற்கரை அருகே வியாழக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 என பதிவானதாகவும், தைவானின் கடலோர நகரமான ஹெங்சுன் தென்கிழக்கே கடலில் 44 கி.மீட்டர் (27 மைல்) ஆழத்தில் அதன் மையம் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் சேத விவரங்கள் குறித்த முழுமையான எந்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
தைவான், ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படும் நில அதிர்வு செயலில் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ளது, இது சக்திவாய்ந்த பூகம்பங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கத்து.