லண்டன்: பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் விகிதம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, அங்கு கடந்த மாதத்தில் மட்டும் 16 பேரில் ஒருவருக்கு (6.37 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, முந்தைய மாதத்தின் கரோனா பாதிப்பு விகித்தத்தைவிட மிகவும்க அதிமாகும். அப்போது 35 பேரில் ஒருவருக்கு மட்டுமே (சுமாா் 2.86 சதவீதம்) கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
ஒவ்வொரு 30 நாள்களிலும் புதிய கரோனா பாதிப்பு இரட்டிப்பாவதால் இந்த பரவல் விகிதம் அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.