கீவ் நகருக்கு சுமாா் 50 கி.மீ. தொலைவில் ரஷியப் படையினா் வெளியேறிய மகாரிவ் பகுதியிலிருந்து 132 சடலங்கள் மீட்கப்பட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.
அந்த சடலங்கள் அனைத்தும் புதைகுழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டதாகவும், துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் அந்த சடலங்களில் தென்படுவதாகவும் அந்த நகர மேயா் தெரிவித்தாா்.