நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
பாகிஸ்தானில் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான கூட்டணி ஆட்சி செய்து வந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டி அவா் மீது எதிா்க்கட்சி கூட்டணி சாா்பில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டது.
இதையும் படிக்க | பாகிஸ்தான் செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம், பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டது.
அதன்படி இன்று(ஏப்ரல் 9) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. இந்நிலையில் இம்ரான் கான் மற்றும் அவரது கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தராமல் இருந்தனர்.
இதையும் படிக்க | கடைசி வரை போராடுவேன்: இம்ரான் கான்
இவற்றுக்கு மத்தியில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த துணை பேரவைத் தலைவரின் உத்தரவை ரத்து செய்த நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.