ஜிம்பாப்வேயில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 35 பேர் பலியானார்கள்.
ஜிம்பாப்வே நாட்டில் ஈஸ்டரையொட்டி சிமானிமானி நகரத்தில் இருந்து மஸ்விங்கோ நகரில் உள்ள தேவாலயத்திற்கு நேற்றிரவு பேருந்து சென்றுகொண்டிருந்தது.
இந்த பேருந்து மஸ்விங்கோ அருகே வந்தபோது திடீரென பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 35 பேர் பலியானார்கள். 70க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய பேருந்தில் 100க்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர்.
இதையும் படிக்க- குஜராத்தில் 108 அடி அனுமன் சிலை: நாளை திறந்துவைக்கிறார் மோடி
அதிக எண்ணிக்கையில் பயணிகளை பயணித்ததே பேருந்து விபத்துக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.