ஜிம்பாப்வேயில் பேருந்து விபத்து: 35 பேர் பலி

ஜிம்பாப்வேயில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 35 பேர் பலியானார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜிம்பாப்வேயில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 35 பேர் பலியானார்கள்.

ஜிம்பாப்வே நாட்டில் ஈஸ்டரையொட்டி சிமானிமானி நகரத்தில் இருந்து மஸ்விங்கோ நகரில் உள்ள தேவாலயத்திற்கு நேற்றிரவு பேருந்து சென்றுகொண்டிருந்தது. 

இந்த பேருந்து மஸ்விங்கோ அருகே வந்தபோது திடீரென பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 35 பேர் பலியானார்கள். 70க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய பேருந்தில் 100க்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையில் பயணிகளை பயணித்ததே பேருந்து விபத்துக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com