கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு போ கோத்தபய போ எனும் கோஷத்தை முன் வைத்து ஏராளமான போராட்டக்காரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க.. 'சரணடைய மாட்டோம்': மரியுபோல் எஃகு ஆலையில் கடும் போர்
ஏற்கனவே கொழும்புவில், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு திடீரென அதிபர் அலுவலகத்துக்கு வெளியே போராட்டம் வெடித்தது.
நாட்டின் மிக மோசமான பொருளாதார பற்றாக்குறைக்கு அதிபர் கோத்தபய ராஜபட்சவின் ஊழல் ஆட்சியும், தவறான கொள்கைகளுமே காரணம் என்று குற்றம்சாட்டி, உடனடியாக பதவி விலகுமாறு கோஷமெழுப்பினர்.