போலந்து நாட்டில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலந்து நாட்டின் பாவ்லோவிஸ்ஸில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் புதன்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது. மதியம் 12 மணியளவில் 1000 மீட்டர் ஆழத்தில் மீத்தேன் வாயு வெளியேறிய நிலையில் வெடிவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | சரிவை சந்திக்கும் நெட்பிளிக்ஸ்
வெடிவிபத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். வெடிவிபத்தில் சிக்கிய 7 பேரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.