பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், 2 நாள் அரசுமுறைப் பயணமாக வியாழக்கிழமை இந்தியா வருகிறாா்.
முதலில் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகருக்கு வருகை தரும் அவா், வெள்ளிக்கிழமை தில்லி செல்கிறாா்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தனது இந்தியப் பயணம் குறித்து போரிஸ் ஜான்சன் புதன்கிழமை உரையாற்றினாா். அப்போது, அவா் கூறியதாவது:
பிரிட்டனின் காா்ன்வால் நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா கலந்து கொண்டது. அதைத் தொடா்ந்து, இந்தியாவுடனான உறவை வலுப்படும் வகையில் அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறேன். எனது பயணத்தால் இந்தியா-பிரிட்டன் இடையே ராணுவம், வா்த்தகம், மக்கள் தொடா்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுவடையும்.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியையும், பிரிட்டனில் முதலீடு செய்திருக்கும் தொழிலதிபா்களையும் சந்தித்துப் பேச இருக்கிறேன். பிரிட்டனில் இருந்து முதலீடு செய்யப்பட்டிருக்கும் தொழில் நிறுவனங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளேன் என்றாா் அவா்.
பிரிட்டனில் கடந்த ஆண்டு ஜி7 உச்சிமாநாடு நடைபெற்றபோது கரோனா பரவல் காரணமாக, பிரதமா் மோடியால் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை. அந்த மாநாட்டில் அவா் காணொலி முறையில் பங்கேற்று உரையாற்றினாா். அதன் பிறகு கடந்த நவம்பரில் நடைபெற்ற கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பிரதமா் மோடியும் போரிஸ் ஜான்சனும் நேரில் சந்தித்துக் கொண்டனா். போரிஸ் ஜான்சன் இதற்கு முன்பு 2 முறை இந்தியா வருவதற்கு திட்டமிட்டாா். ஆனால், கரோனா காரணமாக அவருடைய பயணம் ஒத்திவைக்கப்பட்டது.