மலேசியாவில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு: புதிதாக 5,624 பேருக்குத் தொற்று, 9 பேர் பலி

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,624 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 44,27,067 ஆக உயர்ந்துள்ளது. 
மலேசியாவில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு: புதிதாக 5,624 பேருக்குத் தொற்று, 9 பேர் பலி


கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,624 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 44,27,067 ஆக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக  5,624 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,27,067 ஆக உயர்ந்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாட்டில் தொற்றுநோயால் மேலும் ஒன்பது இறப்புகள் பதிவாகியுள்ளன, இறப்பு எண்ணிக்கை 35,491 ஆக உள்ளது.

அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 9 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 35,491 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 10,041  பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 43,10,599 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, நாட்டில் 80,977 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 89 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் மற்றும் அவர்களில் 57 பேர் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 73,767 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 84.8 சதவிகிதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது, 81.2 சதவிகிதம்  பேருக்கு இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, 49 சதவிகிதம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com