ஜப்பானில் 26 பேருடன் சுற்றுலா படகு மாயமான பகுதியிலிருந்து நேற்று வரை 10 பேரது உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு குழந்தையின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து மீட்புக் குழுவினா் கூறியதாவது:
‘காஸூ 1’ படகு மாயமான கடல் பகுதியில் நடந்த மீட்புப் பணியின்போது நேற்று வரை 10 பேரது உடல்கள் கண்டறியப்பட்டன. மேலும் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதையடுத்து பலி எண்ணிக்கை 11 ஆனது.
இதையும் படிக்க.. 'பச்சப் புள்ள பாவம்': குட்டியை வழிநடத்தும் யானைகள் - வைரல் விடியோ
அந்தப் பகுதியில் தேடுதல் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று மீட்புக் குழுவினா் தெரிவித்தனா்.
‘காஸூ 1’ படகு ஷிரேடோகோ தீபகற்பம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அதில் நீா் புகுந்து மூழ்கி வருவதாக அவசர அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனால், மீட்புப் படையினர் வருவதற்குள் கடலுக்குள் கப்பல் மூழ்கியது. கடலில் காணாமல் போவதற்கு முன்னா் அந்தப் படகில் 24 பயணிகளும் 2 பணியாளா்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.