கொழும்பு: நாட்டின் பொருளாதார நெருக்கடியை சீர்செய்யும் வகையில் உடனடியாக இடைக்கால அரசு அமைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
கரோனா பேரிடரைத் தொடர்ந்து இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி, கடன் சுமை அதிகரிப்பு, வெளிநாட்டுப் பணம் கையிருப்பில் இல்லாதது போன்றவை, நாட்டில் நீண்ட நேர மின்தடை, எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பாதிப்புகள் நேரிட இதனால் தொழில்துறை மற்றும் ஏழை, நடுத்தர குடும்பங்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின.
ஆளும்கட்சியை எதிர்த்தும், அதிபரை எதிர்த்தும் பொதுமக்கள் போராட்டமும் வெடிக்கத் தொடங்கியது.