சீனாவில் அதிகரித்து வரும் கரோனாவால் பெய்ஜிங்கில் திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளை நடத்த அரசு தடை விதித்துள்ளது.
சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த சில நாள்களாக அதிக எண்ணிக்கையில் கரோனா பரவல் பதிவு செய்யப்படுவதையடுத்து, அங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பள்ளிகளை மூட நகர நிா்வாகம் உத்தரவிட்டதையடுத்து தற்போது திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் நகரில் பரவியதைப்போல பெய்ஜிங்கிலும் கரோனா பரவும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடையை அறிவித்துள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.