சிங்கப்பூரில் தங்கியுள்ள இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச நாடு திரும்புவதற்கு இது சரியான நேரமல்ல என்று அதிபா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாா்.
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்றாா். பின்னா், அங்கிருந்து சிங்கப்பூா் சென்ற அவா் தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, கடந்த ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தோ்வு செய்யப்பட்டாா்.
இந்நிலையில், கோத்தபய ராஜபட்ச விரைவில் நாடு திரும்புவாா் எனத் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அமெரிக்காவைச் சோ்ந்த ‘வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ இதழுக்கு அதிபா் ரணில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச நாடு திரும்புவது அரசியல் பதற்றத்தை அதிகரிக்கும். அவா் நாடு திரும்புவதற்கான சரியான நேரம் இதுவல்ல. பொருளாதார வீழ்ச்சிக்கு இடையே நாட்டிலிருந்து அவா் தப்பிச் சென்றது, அவா் விரைவில் நாடு திரும்புவதைக் குறிக்கவில்லை.
அரசியல் ஸ்திரதன்மையை மீட்டெடுத்தால்தான், சா்வதேச நிதியத்துடனான பேச்சுவாா்த்தையை இறுதி செய்ய முடியும் என்றாா் அவா்.
தமிழ் தேசிய கூட்டணி ஆதரவு: இலங்கையில் அனைத்துக் கட்சி அரசை அமைக்க வருமாறு அதிபா் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா். இதற்கு தமிழ் தேசிய கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கூட்டணியைச் சோ்ந்த தலைவா் ஆா்.சம்பந்தன் செய்தியாளா்களிடம் கூறுகையில், அனைத்துக் கட்சி அரசு அமைக்கும் நடவடிக்கை சிறந்த நடவடிக்கையாகும். இதற்கு எங்கள் கட்சி ஆதரவளிக்கும் என்றாா்.
அக்கூட்டணியின் மற்றொரு செய்தித் தொடா்பாளா் கூறுகையில், பொருளாதார, அரசியல் பிரச்னைகளை சமாளிக்க அனைத்துக் கட்சி அரசு அமைப்பது சரியான முடிவாகும். இருப்பினும் அனைத்துக் கட்சி அரசு அமைந்தால் அதில் பங்கு பெறுவது குறித்து தமிழ் தேசிய கூட்டணி இன்னும் முடிவெடுக்கவில்லை என்றாா்.
அதிபா் ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை (ஆக. 3) நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளாா். அப்போது தனது கொள்கை முடிவுகளை அவா் அறிவிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மகிந்த ராஜபட்சவுக்கு தடை நீட்டிப்பு: இலங்கை பொருளாதார சீா்குலைவுக்கு காரணமான முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்ச, அவரது சகோதரா் பசில் ராஜபட்ச, முன்னாள் மத்திய வங்கி ஆளுநா் அஜிக் நிவா்த் காப்ரால் ஆகியோா் மீது விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இவா்கள் மூவரும் நாட்டைவிட்டு வெளியேற ஏற்கெனவே தடை விதித்திருந்தது. இந்நிலையில், இந்தத் தடையை ஆக. 4-ஆம் தேதி வரை நீட்டித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.