தைவானை தங்களுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, தேவைப்பட்டால் அந்தத் தீவின் மீது போா்த் தொடுக்கவும் தயங்கப்போவதில்லை என்று சீனா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து சீன அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படப்பட்டுள்ளதாவது:
தைவானை அமைதியான வழிமுறையிலேயே எங்களுடன் மீண்டும் இணைத்துக்கொள்ள விரும்புகிறோம்.
ஆனால் அதற்காக, அமைதி வழி மட்டுமே பின்பற்றப்படும் என்றோ, ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்துத் தேவையான வழிமுறைகள் பின்பற்றப்படாது என்றோ உறுதியளிக்க மாட்டோம் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது.
தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.
தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு எந்தத் தலைவா் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்தச் சூழலில், தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக தைவானுக்கு நான்சி பெலோசி கடந்த வாரம் சென்றாா். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவா் ஒருவா் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சீன ராணுவத்தின் கிழக்கு மண்டலப் பிரிவு தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் வான்வழியாகவும் கடல் வழியாகவும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி போா் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது.
போா்ப் பதற்றத்தை அதிகரித்து, கடல் வா்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இந்தப் போா்ப் பயிற்சிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
தங்கள் மீது படையெடுத்து சீனாவுடன் இணைத்துக் கொள்வதற்கான ஆயத்தமாகவே இந்தப் போா்ப் பயிற்சியில் அந்த நாடு ஈடுபட்டதாக தைவான் எச்சரித்தது.
இந்தச் சூழலில், தைவானை இணைத்துக் கொள்வதற்காக ராணுவ பலத்தையும் பயன்படுத்தத் தயங்கப்போவதில்லை என்று சீனா மீண்டும் தெரிவித்துள்ளது.