கிரீமியா: ரஷிய ஆயுதக் கிடங்கில் குண்டுவெடிப்பு, தீ

ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தில், ரஷிய ஆயுதக் கிடங்கில் செவ்வாயக்கிழமை குண்டுகள் வெடித்து தீப்பிடித்தது.
கிரீமியா: ரஷிய ஆயுதக் கிடங்கில் குண்டுவெடிப்பு, தீ

ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தில், ரஷிய ஆயுதக் கிடங்கில் செவ்வாயக்கிழமை குண்டுகள் வெடித்து தீப்பிடித்தது.

சதிச் செயல் காரணமாக இந்த குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டதாக ரஷியா கூறினாலும், கிரீமியாவிலுள்ள ரஷிய விமான படை தளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படும் உக்ரைன், தற்போது ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கிரீமியாவின் மாய்ஸ்கோயோ பகுதியிலுள்ள ரஷிய ஆயுதக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை திடீரென குண்டுகள் வெடித்தது. அதனைத் தொடந்து அந்தக் கிடங்கில் தீப்பற்றி எரிந்தது.

அதனைத் தொடா்ந்து, அந்தப் பகுதியிலிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மாய்ஸ்கோயோ பகுதியிலுள்ள ஆயுதக் கிடங்கில் சிலரது சதிச் செயல் காரணமாக குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் அந்தப் பகுதியிலிருந்த ஒரு மின் உற்பத்தி நிலையம் சேதமடைந்தது. மின் கம்பிகள், ரயில் பாதைகள், சில குடியிருப்புக் கட்டடங்களும் இந்த குண்டுவெடிப்பில் சேதமடைந்தன.

எனினும், இதில் யாரும் பலத்த காயமடையவில்லை என்று அமைச்சகம் தெரிவித்தது.

முன்னதாக, ரஷிய அரசின் செய்தி நிறுவனமான ஆா்ஐஏ கூறுகையில், குண்டுவெடிப்பில் ரயில் பாதைகள் சேதமடைந்ததால் அந்தப் பகுதிக்குச் செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தது.

இதற்கிடையே, கிரீமியாவின் குவாா்டெய்ஸ்கோயே எனற இடத்திலுள்ள மற்றொரு ரஷிய விமான தளத்திலிருந்தும் செவ்வாய்க்கிழமை புகை மண்டலம் எழுந்தது என்று அந்தப் பகுதி மக்கள் கூறியதாகர ரஷியாவின் வா்த்தக நளிதழான கோமா்சன்ட் தெரிவித்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் அரசுப் படையினருக்கு எதிராக சண்டையிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். அப்போது ரஷியாவும் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. அந்தப் போரின் ஒரு பகுதியாக, டான்பாஸ் பிராந்தியத்தில் அரசுப் படைகளிடம் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல் நடவடிக்கைகளை ரஷியா மேற்கொண்டு, அதில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டு வருகிறது.

அத்துடன், கிரீமியாவுக்கும் டான்பாஸ் பிரதேசத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக இடைப்பட்ட பகுதிகளையும் ரஷியா கைப்பற்றி வருகிறது.

இந்ச நிலையில், கிரீமியாவில் கருங்கடலையொட்டியுள்ள சாகி விமான படைத் தளத்தில் கடந்த வாரம் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடித்தன.

இதில், ஒருவா் உயிரிழந்ததாகவும் 14 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நடுத்தர தொலைவு ஏவுகணைகள் மூலம் உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்பட்டாலும், ரஷியா அதனை மறுத்தது. விமான தளத்தில் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதில் குறைபாடு ஏற்பட்டதால், அங்கு வைத்திருந்த ஆயுத வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதாக ரஷியா கூறியது.

எனினும், அந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் நேரடியாகப் பொறுப்பேற்காவிட்டாலும் ரஷியாவின் இந்த விளக்கத்தை கிண்டல் செய்தது.

இந்த நிலையில், கிரீமியா பகுதியிலுள்ள மற்றொரு ரஷிய ராணுவ மையத்திலும் தற்போது குண்டுகள் வெடித்துள்ளது.

ஏற்கெனவே, போரின்போது உக்ரைன் எல்லையொட்டிய தங்களது ஆயுதக் கிடங்குகள் மற்றும் ராணுவ நிலைகள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் குண்டுவெடிப்புகள் மற்றும் தீப்பிடிப்பு சம்பவங்கள் நடைபெற்ாக ரஷியா பலமுறை கூறியுள்ளது.

அவற்றில் பல சம்பவங்களுக்கு உக்ரைன் நடத்திய தாக்குதல்தான் காரணம் என்று ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

இருந்தாலும், அந்தச் சம்பவங்கள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் பெரும்பாலும் மௌனம் காத்து வருகின்றனா். அதைப் போலவே கிரீமியா குண்டு வெடிப்புகள் குறித்தும் உக்ரைன் அதிகாரிகள் வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.

தங்களால் இணைத்துக் கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பத்தை ரஷியப் பகுதியாக உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், அந்த தீபகற்பத்தை ரஷியாவிடமிருந்து மீட்கப்போவதாக உக்ரைன் சூளுரைத்து வருகிறது.

இந்தச் சூழலில், கிரீமியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தினால் கடும் பின்விளைவுகள் ஏற்படும்.

அதற்கான பதிலடித் தாக்குதலில், உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் தலைமை மையங்களும் தப்பாது என்றும் ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் சூழலில், கிரீமியாவிலுள்ள ரஷிய விமான தளத்தில் கடந்த வாரமும் ஆயுதக் கிடங்கில் தற்போதும் குண்டுகள் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com