கீவ் நகரின் சாலைகளில் போரிஸ் ஜான்சன் பார்வையிடும்போது அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கியுன் உடன் இருந்தார்.
உக்ரைன் நாடு சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து இன்றுடன் 31 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்தவகையில் உக்ரைன் இன்று 31 ஆவது சுதந்திர நாளைக் கொண்டாடுகிறது.
இதேபோன்று உக்ரைன் மீது ரஷியா போர்த்தொடுத்து ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன. ரஷியாவுக்கு எதிரான போரில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவி செய்து வருகின்றன.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைனுக்குச் சென்றார். அங்கு அவருக்கு அதிபர் ஸெலென்ஸ்கி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைநகரான கீவ் பகுதியில் சாலைகளில் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் நடந்து சென்று பார்வையிட்டார்.