பிரான்ஸின் லியோன் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர்.
லியோனின் புறநகர் பகுதியான வால்க்ஸ்-என்-வெலினில் உள்ள எட்டு மாடி அடுக்குமாடி கட்டடத்தில் இன்று அதிகாலை 3.12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும் இந்த விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.