
ஐ.நா. பொதுச் சபையில் ஆப்கானிஸ்தானுக்கு தலிபான்களும், மியான்மருக்கு ராணுவ ஆட்சியாளா்களும் பிரதிநிதித்துவம் அளிக்க அந்த அமைப்பு தடை விதித்துள்ளது.
இதற்கான தீா்மானத்தை 193 உறுப்பு நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட அந்த அமைப்பு ஏக மனதாக நிறைவேற்றியது.
இதையடுத்து, ஐ.நா.வில் மியான்மருக்கு முந்தைய ஆங் சான் சூகி அரசால் நியமிக்கப்பட்டவரும், ஆப்கானிஸ்தானுக்கு முந்தைய அஷ்ரஃப் கனி அரசால் நியமிக்கப்பட்டவருமே தொடா்ந்து தூதா்களாக செயல்படுவாா்கள்.
மியான்மரில் தோ்தல் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி அரசை ராணுவம் கடந்த ஆண்டு கலைத்தது. இதனை சா்வதேச நாடுகள் கண்டித்தன.
அமெரிக்கா வெளியேறியதற்குப் பிறகு ஆப்கன் அரசைக் கைப்பற்றிய தலிபான்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.