சிறையிலிருந்து வெளியே வருகிறார் தொடா் கொலை குற்றவாளி சாா்லஸ் சோப்ராஜ் 

நேபாள உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டநிலையில், இன்று சிறையிலிருந்து வெளியே வருகிறார் தொடர் கொலை குற்றவாளி சார்லஸ் சோப்ராஜ்.
சிறையிலிருந்து வெளியே வருகிறார் தொடா் கொலை குற்றவாளி சாா்லஸ் சோப்ராஜ் 
சிறையிலிருந்து வெளியே வருகிறார் தொடா் கொலை குற்றவாளி சாா்லஸ் சோப்ராஜ் 

காத்மாண்டு: நேபாள உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டநிலையில், இன்று சிறையிலிருந்து வெளியே வருகிறார் தொடர் கொலை குற்றவாளி சார்லஸ் சோப்ராஜ்.

அவரை விடுதலை செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், 15 நாள்களுக்குள் அவரது நாட்டுக்கு அவரை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், எங்கே அனுப்பி வைக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் குறிப்பிடவில்லை.

சோப்ராஜுக்கு இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. நேபாளத்தில் ஆயுள் தண்டனை என்றால் 20 ஆண்டுகள். அவர் 19 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்ட நிலையில், இதய நோய் ஏற்படடிருப்பதாலும், அவரது ஒட்டுமொத்த தண்டனையில் 75 சதவீதத்துக்கும் மேல் தண்டனைக் காலத்தை நிறைவு செய்துவிட்டதாலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸைச் சோ்ந்த தொடா் கொலை குற்றவாளியான சாா்லஸ் சோப்ராஜுக்கு (78) வழங்கப்பட்ட 20 ஆண்டுகள் தண்டனைக் காலத்தில் 19-ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது உடல் நிலையைக் காரணம் காட்டி நேபாள உச்சநீதிமன்றம் புதன்கிழமை அவரை விடுவித்தது.

அமெரிக்க மற்றும் கனடாவைச் குடிமக்கள் இருவரை 1975-இல் சாா்லஸ் சோப்ராஜ் கொலை செய்தாா். கடந்த 2003-இல் காத்மாண்டுவில் அவா் கைது செய்யப்பட்ட நிலையில், பக்தபூா் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையை விதித்தது. இதற்கிடையே மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் பலரை அவர் கொலை செய்திருப்பதை அவரே ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன் அடிப்படையில், அவர் ஆப்கானிஸ்தான், இந்தியா, தாய்லாந்து, துருக்கி, நேபாளம், ஈரான், ஹாங் காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 20 பேரை கொலை செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

20 ஆண்டுகளுக்கு முன்பு, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சோப்ராஜ். பிறகு குற்றம் தள்ளுபடி செய்யப்பட்டு, 1997ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பிறகு அவர் 2003ஆம் ஆண்டு வாக்கில் காத்மாண்டுவில் இருந்ததாகத் தகவல்கள் கிடைத்தன. 

தன்னை விடுதலை செய்யக் கோரி நேபாள உச்சநீதிமன்றத்தில் சோப்ராஜ் மனு தாக்கல் செய்தாா். மனுவில், நேபாளத்தின் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைக்குரிய தண்டனைக் காலத்தை நிறைவு செய்திருப்பதாகவும் நல்ல நடத்தையின் காரணமாக விடுதலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஸப்னா பிரதான் மல்லா மற்றும் திலக் பிரசாத் சிரேஷ்டா ஆகியோா் அடங்கிய அமா்வு, சோப்ராஜை விடுவிக்குமாறு உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோப்ராஜை 15 நாள்களுக்குள் அவரது நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com