இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான மலுகுவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக வானிலை காலநிலை மற்றும் புவிஇயற்பியல் வெளியிட்ட தகவலின்படி,
நிலநடுக்கமானது இன்று அதிகாலை 4.25 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.
மலுகுவில் பராத் தயா மாவட்டத்திலிருந்து வடகிழக்கே 86 கி.மீ தொலைவில் மற்றும் கடலுக்கு அடியில் 131 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று கூறப்படுகிறது.
இருப்பினும், சுனாமி குறித்த எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.